சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது

சங்கராபுரம் அருகே பெண் கேட்டு தகராறு வாலிபர் கைது

Update: 2021-04-27 16:37 GMT
சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சப்பிள்ளை மகன் மணிகண்டன்(வயது 18). இவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த முனுசாமி(47) என்பவரின் வீட்டுக்கு சென்று அவரிடம் பெண் கேட்டு தகராறு செய்து திட்டி தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. 
இது குறித்து முனுசாமி கொடுத்த புகாரின் பேரில் மணிகண்டன், இவரது நண்பர் மணியரசன்(21), உறவினர்கள் ராமச்சந்திரன், ஏழுமலை ஆகியோர் மீது சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்