மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-27 18:51 GMT
புதுக்கோட்டை, ஏப்.28-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிமளத்தில் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்தார்.
65 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மேலும் 65 பேருக்கு கொரோனா தொற்றுஉறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 85 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 742 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரிமளம்
அரிமளம் ஒன்றியம் நல்லம்மாள் சமுத்திரம் ஊராட்சி நம்பூரணிபட்டி கிராமத்தை சேர்ந்த 55 வயது ஆண் ஒருவருக்கு கடந்த 24-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த 25-ந்் தேதி புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.
இந்நிலையில் சமுத்திரம் ஊராட்சி தாஞ்சூர் கிராமத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கு நேற்று கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்