விழிப்புணர்வு முகாம்

அருப்புக்கோட்டையில் ெகாரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2021-04-27 20:05 GMT
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் போக்குவரத்துதுறை, வருவாய் துறை, போக்குவரத்து காவல் துறை, நகராட்சி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோல்டன், அரிமா சங்கம் ஆகியவை இணைந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தியது. முகாமில்  வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன், தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, அரிமா சங்கத் தலைவர் முத்துவேல், செயலாளர் கிருஷ்ணகுமார், வனத்துக்குள் அருப்புக்கோட்டை தலைவர் கனகராஜ், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினர்.

மேலும் செய்திகள்