மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

பாளையங்கோட்டையில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-27 21:44 GMT
நெல்லை, ஏப்:
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் நாராயணன் மனைவி லட்சுமி (வயது 74). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட லட்சுமி நேற்று காலை வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்