19 பேர் மீது வழக்கு

காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-29 17:16 GMT
காரைக்குடி,

காரைக்குடி 5 விளக்கு அருகில் தமிழக மக்கள் மன்றம் சார்பில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதியின்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அபிநயா கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மற்றும் கொரோனா தொற்றினையொட்டி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாகவும் மக்கள் மன்ற மாநில ஒருங்கிணைப்பாளர் ராசகுமார் உள்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்