சித்தர் பீடங்களில் சிறப்பு பூஜை

சிவகிரியில் சித்தர் பீடங்களில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-04-29 20:23 GMT
சிவகிரி, ஏப்:
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட கருணையானந்த சித்தர் பீடத்தில் சிறப்பு பூைஜ நடந்தது. தொடர்ந்து பால், தயிர், நெய், இளநீர் உள்பட 18 வகையான சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் ராஜா செய்திருந்தார். மேலும் அழுக்கு சித்தர் சுவாமிகள் பீடத்தில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா குமார், ராம்ராஜ், ராசா, காசி ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்