உவரி போலீஸ் ஏட்டு திடீர் சாவு

உவரி போலீஸ் ஏட்டு திடீரென இறந்தார்.

Update: 2021-05-01 19:34 GMT
திசையன்விளை, மே:
நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 54). இவர் உவரி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 23-ந் தேதி இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நேற்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மேலும் செய்திகள்