இண்டூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

இண்டூர் அருகே கல்லூரி மாணவி தற்கொலை

Update: 2021-05-01 23:45 GMT
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகள் வெண்ணிலா (வயது 18). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது உறவுக்கார பெண் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களது காதலுக்கு மாணவி வெண்ணிலா உதவி செய்ததாக தெரிகிறது. இதனை மாணவியின் தாயார் அங்கம்மாள் கண்டித்துள்ளார். 
இதனால் மனம் உடைந்த கல்லூரி மாணவி வெண்ணிலா கடந்த 14-ந் தேதி வீட்டில் விஷம் தின்று விட்டு மயங்கி கிடந்தார். இதனைத் தொடர்ந்து பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் வெண்ணிலா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
======

மேலும் செய்திகள்