மேலும் 270 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 270 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதில் 63 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 16 ஆயிரத்து 281 ஆக உயர்ந்தது.
அதேநேரம் 244 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,598 பேர் சிகிச்சையில் உள்ளனர்.