முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கூடங்குளத்தில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-02 22:22 GMT
கூடங்குளம், மே:
கூடங்குளம் மேற்கு பைபாஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சாமிகண் (வயது 62). இவர் அப்பகுதியில் இளநீர் கடை நடத்தி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த சாமிகண் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், கூடங்குளம் போலீசார் விரைந்து சென்று, சாமிகண்ணின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்