வெள்ளகோவிலில் காசாளருக்கு கொரோனா. வங்கி மூடப்பட்டது

வெள்ளகோவிலில் காசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது.

Update: 2021-05-03 16:16 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் காசாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வங்கி மூடப்பட்டது.
கொரோனா
வெள்ளகோவிலில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றிவந்த 26-வயதான காசாளருக்கு கடந்த சில தினங்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவர் கொரோனா பரிசோதனை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இதையடுத்து அந்த வங்கி காலவரையின்றி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டது. இதற்கான அறிவிப்பு வங்கி முன்பு ஓட்டப்பட்டுள்ளது.  அந்த அறிவிப்பில் கொரோனா தொற்று காரணமாக வங்கி மூடப்பட்டுள்ளது, மறு அறிவிப்பு வரும் வரை அருகிலுள்ள கிளையை அணுக வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
இதையடுத்து அந்த வங்கியில் பணியாற்றும் மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காசாளர் குடியிருக்கும் பகுதியில் பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டு, மருந்து தெளிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்