அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனை

Update: 2021-05-03 17:33 GMT



திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தானியங்கள் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. 700 நெல் மூட்டை, 100 உளுந்து மூட்டை, மணிலா 3 மூட்டை வரத்து காணப்பட்டது. எள் 200 மூட்டை வந்தது. இதன் அதிகபட்ச விலை ரூ.8,156 ஆகவும், குறைந்த பட்ச விலை ரூ.4,675 ஆகவும் இருந்தது. மேலும் கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட இதர தானியங்கள் என மொத்தம் ரூ.27 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

மேலும் செய்திகள்