கிருமி நாசினி தெளிக்கும் பணி

அருப்புக்கோட்டையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.

Update: 2021-05-03 19:36 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை டவுன் போலீஸ்நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு வழக்கு விசாரணைக்காக இருவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்காக இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்தபோது கொரோனா நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அறிவுறுத்தலின் பேரில் போலீஸ்நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நகராட்சி சித்தமருத்துவ சுகாதாரத்துறை மூலம் அனைத்து போலீசாருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்