மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது

மொபட்டில் மணல் கடத்திய 6 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-05-03 21:17 GMT
காட்டுப்புத்தூர்
காட்டுப்புத்தூர் அருகே உள்ள மேலைக்காரைக்காடு காவிரி ஆற்று படுகையில் இருந்து சிலர் மணல் அள்ளி கடத்தப்படுவதாக நத்தம் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் குகன் கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர். அப்போது பாலசமுத்திரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் சுரேஷ்குமார்(வயது 19), சக்திவேல் (19), சந்தோஷ்குமார் (19) மற்றும் 3 சிறுவர்கள் காவிரி ஆற்றில் இருந்து மணல் அள்ளி 4 மொபட்டுகளில் கடத்தி வந்தனர். அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 மொபட்டுகள், 12 மணல் மூட்டைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்