மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

Update: 2021-05-04 19:30 GMT
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 21,028 ஆக உயர்ந்துள்ளது. 
19,044 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1702 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 3 பேர் பலியாகியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை 248 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்