முள்காட்டில் மது விற்றவர் கைது

முள்காட்டில் மது விற்றவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-05-04 19:56 GMT
நச்சலூர்
நச்சலூர் பகுதியில் சிலர் மது விற்பதாக குளித்தலை போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் குளித்தலை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது திருச்சி மாவட்டம், குழுமணி பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 45) என்பவர் நெய்தலூர் காலனி டாஸ்மாக் கடை அருகில் உள்ள முள்காட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்