ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

Update: 2021-05-05 17:27 GMT
திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 280 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

இதில் 72 பேர் பெண்கள் ஆவர். இதையடுத்து அவர்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதனால் மாவட்டத்தின் மொத்த  கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்து 930 ஆக உயர்ந்தது. 

அதேநேரம் 231 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நேற்றைய நிலவரப்படி 1,638 பேர் சிகிச்சையில் உள்ளனர். 


இதற்கிடையே திண்டுக்கல்லை சேர்ந்த 49 வயது ஆண், கொரோனா பாதிப்புக்கு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் இறந்தார். 

இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆனது.

மேலும் செய்திகள்