சிறுவன் தற்கொலை

கரூரில் சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-05-05 18:32 GMT
கரூர்
கரூர் தொழில்பேட்டை நல்லப்பன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது மகன் நாகவினோதகன் (வயது 17). இந்தநிலையில், நாகவினோதகன் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த காணப்பட்ட நாகவினோதகன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நாகவினோதகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்