தேன்கனிக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மேல்கோட்டை கோட்டை வாசல் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா (வயது 51). உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.