அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல்

அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2021-05-07 20:33 GMT
ஆலங்குடி
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மதியம் 12 மணிக்கு மேல் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை மீறி மதியம் 12 மணிக்கு பிறகும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் ஆலங்குடியில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட 2 கடைகளை மூடி தாசில்தார் கருப்பையா சீல் வைத்தார். மேலும் 15 சிறிய கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

மேலும் செய்திகள்