கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

Update: 2021-05-08 15:58 GMT
கஞ்சா விற்றவர் கைது
மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன் மற்றும் போலீசார் மேட்டுப்பாளையத்தில் உள்ள  ஊட்டி மெயின் ரோடு ஓடந்துறை காந்தி மைதானம் ராமசாமி நகர் ஊமப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று  ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது ஊமப்பாளையம் பவானி ஆற்றங்கரையில் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவர் ஊமப்பாளையம் கீழ்தெருவைச்சேர்ந்த மருதாசலம் (வயது 44) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

 இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
----

மேலும் செய்திகள்