பிரதோஷசத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பிரதோஷசத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2021-05-09 18:14 GMT
தோகைமலை
தோகைமலை அருகே கழுகூரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று பிரதோஷத்தையொட்டி கோவிலில் உள்ள நந்திபகவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நொய்யல் புன்னம் பகுதியில் உள்ள புன்னைவன நாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் நந்தி பகவானுக்க பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. 
வேலாயுதம்பாளையம் புகளூர் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திபகவானுக்கு பால், பழம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்து, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
லாலாபேட்டை செம்பொற்ஜோதி ஈஸ்வரர் கோவிலில் நந்திபகவானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடந்தது. 
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன்கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்