தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 28 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Update: 2021-05-10 14:27 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டி வருகிறார். அதன்படி கடந்த வாரம் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல் உள்ளிட்ட பணிகளை பாராட்டி 28 போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சைபர் குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்