காரிமங்கலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

காரிமங்கலம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-10 16:56 GMT
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே உள்ள விருதாகவுண்டனூரை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது மகன் சிவகுமார் (வயது 27). இவர் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் மது குடித்து விட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்தார். இதை முருகன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிவகுமார் விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்