வேலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

வேலூரில் கொரோனாவுக்கு 3 பேர் பலி

Update: 2021-05-10 18:29 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விடுகின்றனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளிலும், சில தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 2 பேர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவர் என மொத்தம் 3 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனா தொற்றுக்கு பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல் பாதுகாக்கப்பட்ட முறையில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்