தேசூர் அருகேதூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

தேசூர் அருகேதூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை

Update: 2021-05-11 12:23 GMT
சேத்துப்பட்டு

தேசூர் அருகே நல்லதுசேனை கிராமத்தை சேர்ந்தவர் சேகர், டிரைவர். இவரது மனைவி செல்வி. இவர்களுடைய மகள் காயத்திரி (வயது 19), கல்லூரி மாணவி. .இவர் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதனை பெற்றோர் தட்டி கேட்டனர்.
இதனால் மனமுடைந்து அவர் அவரது நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசூர் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்