மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு

மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்

Update: 2021-05-11 18:16 GMT
மதுரை
மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகன் நகுல் (வயது 8). சம்பவத்தன்று செல்லப்பா வீட்டின் மேல் மாடியில் உள்ள தொட்டியில் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த நகுல் எதிர்பாராத விதமாக மோட்டாரின் வயரை தொட்டுள்ளான். அதில் மின்சாரம் தாக்கி சிறுவன் தூக்கி வீசப்பட்டான். மயங்கி கிடந்த அவனை வீட்டில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு வந்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது நகுல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்