கடை வியாபாரிகளுக்கு அபராதம்
சிங்கம்புணரியில் தடையை மீறி வாரச்சந்தை நடத்த கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரியில் தடையை மீறி வாரச்சந்தை நடத்த கடை அமைத்த வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தடையை மீறி சந்தை
இந்த நிலையில் நேற்று சிங்கம்புணரி சாலையின் இருபுறமும் வாரச்சந்தை வியாபாரிகள் தங்கள் கடைகளை விரித்து வியாபாரம் பார்த்தனர். இது பற்றி அறிந்ததும் சம்பவ இடத்துக்கு தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்முகமது மற்றும் அதிகாரிகள் வந்தனர்.
அவர்கள் கொரோனா பரவும் காலத்தில் சந்தை அமைக்க கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர். தடையை மீறி கடை வைத்து இருந்த 18 வியாபாரிகளிடம் இருந்து எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அபராத தொகை செலுத்திய பிறகு திருப்பி வழங்கப்பட்டது.
முறையீடு