முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-13 18:00 GMT
நச்சலூர்
நச்சலூர் பகுதியில் உள்ள டீக்கடைகள், பேக்கரி, மளிகைக்கடைகள் உள்பட பல கடைகளில் நங்கவரம் வருவாய் ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடைகளின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மேலும் இருசக்கர வாகனத்தில் முககவசம் அணியாமல் வந்தவர்களை அதிகாரிகள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப்போது கிராம நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர்

மேலும் செய்திகள்