வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

நெல்லையில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2021-05-13 18:57 GMT
நெல்லை:

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அச்சம்பாடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 30). இவர் ஒரு வழக்கில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏற்கனவே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சுடலைமணியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு, சுடலைமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
உடனே போலீசார் சுடலைமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான ஆணையை, பாளையங்கோட்டை மத்திய சிறை அதிகாரிகளிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்