அட்சய திருதியையொட்டி ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

அட்சய திருதியையொட்டி ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Update: 2021-05-14 17:17 GMT
பொள்ளாச்சி

ஆனைமலையில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

மேலும் பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 

பூமாலை, வெட்டிவேர் மாலை மற்றம் தங்க நிறத்தில் ஆன 5 ரூபாய் நாணயம் அலங்காரத்தில் ரங்கநாதரும், ஸ்ரீதேவி, பூதேவியும் அருள்பாலித்தனர்.

 கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் அர்ச்சகர், கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்