கொரோனா நிவாரண தொகை

இளையான்குடி பகுதியில் கொரோனா நிவாரண தொகையை தமிழரசி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2021-05-15 18:16 GMT
இளையான்குடி,

இளையான்குடி ஒன்றியத்திற்குட்பட்ட இளையான்குடி, கண்ணமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி நிவாரண தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இளையான்குடி தாசில்தார் ஆனந்த், வட்ட வழங்க அலுவலர் பாலகிருஷ்ணன், தி.மு.க மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், ஒன்றிய பேரூர் செயலர்கள் நஜிமுதீன், பொன்னுச்சாமி, ஆறு.செல்வராசன், தமிழ்மாறன், வெங்கட்ராமன், கூட்டுறவு கடன் சங்க தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து மாவட்ட பிரதிநிதி யாசின், செய்யதுகான், இப்ராகிம், சண்முகம், சத்தியயேந்திரன், சேதுராமன், கணேஷ், ஊராட்சி மன்ற தலைவர் சைமன், ராஜேந்திரன், மானாமதுரை தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி சுப.அன்பரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்