மதுபாட்டில்கள் விற்றவர் கைது
மதுபாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் செல்வா(வயது 55) என்பவர் ஊரடங்கு காலத்தில் மதுபாட்டில்கள் வைத்து விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து சென்ற போது மது பாட்டில் விற்ற செல்வாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 42 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது.