மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-17 17:59 GMT
புதுக்கோட்டை, மே.18-
புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 2 ெபண்கள் பலியாகினர்.
தொற்று அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தொற்று பாதிப்பு முன்பை விட பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினரால் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இல்லாத வகையில் 400-ஐ தாண்டி 407 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 638 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்த 285 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்து 217 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 247 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
2 பெண்கள் பலி
இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு மதுராந்தகத்தில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக இறந்தார். இதேபோல புதுக்கோட்டையை சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்