சிவகாசி,மே
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் முத்துராமலிங்கம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஆறுமுகச்சாமி (வயது 46) என்பவர் தனது வீட்டின் பின் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.