சென்னிமலை பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது

சென்னிமலை பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது

Update: 2021-05-18 22:37 GMT
சென்னிமலை
சென்னிமலை தினசரி மார்க்கெட் பகுதியில் 39 காய்கறி கடைகள் செயல்பட்டு வந்தது. இது நெரிசலான பகுதி என்பதால் கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் இந்த கடைகள் அனைத்தும் நேற்று முதல் சென்னிமலை பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி காய்கறியை வாங்குமாறு போலீசார் அறிவுரை வழங்கினார்கள். காலை 6 மணி முதல் தொடங்கிய காய்கறி வியாபாரம் 10 மணி வரை நடைபெற்றது. அதன்பின்னர் பேரூராட்சி பணியாளர்கள் பஸ்நிலைய பகுதியை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்தனர்.

மேலும் செய்திகள்