ஆவூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது

ஆவூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.

Update: 2021-05-19 18:18 GMT
ஆவூர், மே.20-
மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோகராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆவூரை அடுத்த நசரேத் பஸ் நிறுத்தம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதியில் சென்று கண்காணித்த போலீசார் அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த கலிமங்களம் கிராமத்தை சேர்ந்த நல்லுராஜ் (வயது 40), ரவிச்சந்திரன் (39), அமல்ராஜ் (43), பன்னீர்செல்வம் (41), துரைக்குடியை சேர்ந்த சுரேஷ் (39), சக்திவேல் (40), மணிமாறன் (41) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்