அம்மா உணவகங்களில் 31-ந் தேதி வரை விலையில்லா உணவு வழங்கப்படும்

அம்மா உணவகங்களில் 31-ந் தேதி வரை விலையில்லா உணவு வழங்கப்படும் ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தகவல்.

Update: 2021-05-20 16:44 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான ஆர். வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொேரானா 2-வது அலை பரவுவதை தடுக்க தமிழக அரசு வருகிற 24-ந்தேதி வரை முழு ஊரடங்குக்கு உத்தரவிட்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தநிலையில் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் பசியினை போக்க வசதியாக தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று முதல் வருகிற 31-ந் தேதி வரை விலையில்லாமல் உணவு வழங்க ஏற்பாடு ் செய்யப்பட்டுள்ளது. எனவே தஞ்சை திலகர் திடல் அருகே உள்ள அம்மா உணவகத்திலும், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்திலும் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் விலையில்லாமல் உணவு இன்று காலை முதல் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்