ஊரடங்கை மீறியதாக மாவட்டத்தில் 82 பேர் மீது வழக்கு

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 82 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-05-20 19:56 GMT
நெல்லை, மே:
கொரோனா நோய் தொற்று பரவல் அதிவேகமாக பரவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுபடி ஊரடங்கு விதிகளை மீறுவோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 934 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 17 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்