ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிப்பு

பாவூர்சத்திரத்தில் ராஜீவ்காந்தி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2021-05-21 20:52 GMT
பாவூர்சத்திரம், மே:
பாவூர்சத்திரம் நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி பாவூர்சத்திரம் காமராஜர் சிலை அருகே ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு எஸ்.பழனி நாடார் எம்.எல்.ஏ.  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜேசு ஜெகன், இளைஞர் காங்கிரஸ் சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்