பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்
சங்கரன்கோவிலில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில், மே:
சங்கரன்கோவில் நகர அ.தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் சாலை பகுதிகள், சங்குபுரம் தெரு பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கண்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு முககவசங்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு உறுப்பினர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.