மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவி கைது

மருந்து கடையில் பொதுமக்களுக்கு ஊசி போட்டு சிகிச்சை அளித்த கணவன்-மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-05-23 03:41 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 52). இவருடைய மனைவி சசிகலா (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு முதல் வெள்ளக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகின்றனர்.

சமீப காலமாக இவர்களது மருந்து கடையில் காய்ச்சல், சளி உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வரும் பொதுமக்களுக்கு ஊசிபோட்டு சிகிச்சை அளிப்பதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு புகார்கள் வந்தன.

கணவன்-மனைவி கைது

இதையடுத்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அந்த மருந்து கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதில் உடல்நலம் பாதித்த சிலருக்கு கணவன்-மனைவி இருவரும் மருந்து கடையில் மருத்துவம் பார்த்து ஊசி போட்டதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்