விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

விராச்சிலை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-05-29 18:33 GMT
தோகைமலை
தோகைமலை அருகே ஆர்டிமலை மலை மீது பிரசித்தி பெற்ற விராச்சிலை ஈஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று கொரோனாவில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து அனைத்து பரிவார தெய்வகளுக்கும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்