கொரோனாவுக்கு மூதாட்டி பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2021-05-29 21:47 GMT
பெரம்பலூர்:

307 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 143 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 86 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 35 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 43 பேரும் என மொத்தம் 307 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 7,931 ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஏற்கனவே 54 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
2,845 பேருக்கு சிகிச்சை
மருத்துவமனைகளில் 5,031 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,845 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 931 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்