தூத்துக்குடியில் மது விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடியில் மது விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-05-30 14:54 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இதனால் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுவிற்பனை செய்யப்படுகிறதா என்று மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி பூபாலராயர்புரத்தில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக டேனியல் (வயது 27) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 80 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்