திருச்செந்தூரில் போலீசாருக்கு முககவசம்

திருச்செந்தூரில் போலீசாருக்கு முககவசம் வழங்கப்பட்டது.

Update: 2021-05-30 16:18 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் பயன்பெறும் வகையில் குளுக்கோன் டி, முக கவசம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. இவற்றை திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம், என்.ஜி.எம். மார்க்கெட்டிங் நிறுவன உரிமையாளர் மரகதம் நமச்சிவாயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் சதீஸ், கார்த்திக், வ.உ.சி. நற்பணி மன்றம் நிறுவன தலைவர் இசக்கிமுத்து, தலைவர் சுந்தர், துணை செயலாளர் பொன் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்