வீட்டிற்குள் புகுந்த பாம்பு

வீட்டிற்குள் புகுந்த பாம்பு பிடிபட்டது.

Update: 2021-05-30 18:49 GMT
நொய்யல்
கரூர் மாவட்டம் மோளபாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 40).  நேற்று இவரது வீட்டில் ஒரு அறைக்குள் 5 அடி நீளமுள்ள நாகப்பாம்பு அந்த அறைக்குள் இருந்து படம் எடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கவுதம் வெளியில் ஓடி வந்து அக்கம்பக்கத்தினர் அழைத்து பாம்பை விரட்டியுள்ளார். இருப்பினும் வெளியே செல்லவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்து சென்று வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்