முககவசம் அணியாத- சமூக இடைவெளியை பின்பற்றாத 57 பேருக்கு அபராதம்
முககவசம் அணியாத- சமூக இடைவெளியை பின்பற்றாத 57 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கிலும் முககவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 34 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.6 ஆயிரத்து 800-ம், சமூக இடைவெளியை பின்பற்றாத 2 பேருக்கு தலா ரூ.500 வீதம் ஆயிரம் ரூபாயும் அபராதமாக போலீசார் விதித்தனர். வருவாய்த்துறை சார்பில் முககவசம் அணியாத 18 பேருக்கு அபராதமாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600-ம், உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் முககவசம் அணியாத 3 பேருக்கு மொத்தம் ரூ.600-ம் அபராதமாக விதிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி சாலையில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததோடு, அவர்களின் இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.