மேலும் 275 பேருக்கு கொரோனா

பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 275 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-30 19:32 GMT
பெரம்பலூர்:

275 பேருக்கு தொற்று
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 112 பேரும், வேப்பந்தட்டை வட்டாரத்தில் 84 பேரும், வேப்பூர் வட்டாரத்தில் 43 பேரும், ஆலத்தூர் வட்டாரத்தில் 36 பேரும் என மொத்தம் 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மொத்தம் 8,206 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஏற்கனவே 55 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் 5,457 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
சிகிச்சையில் 2,694 பேர்
தற்போது 2,694 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா பாதித்த 62 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 384 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை ெசய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்