நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம் 41 வாகனங்கள் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் முககவசம் அணியாத 338 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-05-30 19:39 GMT
நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பொது இடங்களில் முககவசம் அணியாத 338 பேருக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாத 18 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்